WEB BLOG
this site the web

இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: அரங்கேறும் நகை சுவை நாடகங்கள்.

இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண கூறி மீண்டும் ஒருவர் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து இருக்கிறார். நினைத்தாலே பெரும் துன்பத்தை தருவதாக இருக்கிறது.
அவருக்கு இரண்டு வயதுக்கும் குறைவான வயதுடைய மகனும், இளம் மனைவியும் இருப்பது தெரிய வந்துள்ளது. எனக்கு இந்த மாதிரியான தற்கொலை முயற்சிகளில் உடன்பாடு இல்லை. தமிழன் தற்கொலை பண்ணி கொள்ளவா பிறந்தான்?. முடிந்தால் இரண்டு எதிரியின் உயிரை எடு.
"பிறந்த குழந்தை இறந்து பிறந்தால், வாளால் கீறி புதைப்போம் " - என சும்மா பாடி கொண்டு இருந்தால் போதாது.

அங்கே தமிழச்சிகள் நூற்று கணக்கில் தாலி அறுத்து கொண்டு இருக்கையில், ஜெயலலிதா அம்மணி அவரது அறுபது ஒன்றாவது பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய கட்சி தொண்டரடி ஆழ்வார்கள் ஏற்பாடு செய்த விழாவில் அறுபத்தி ஒன்று ஜோடி -க்கு திருமணம் செய்து வைக்கிறார். நாடு எப்படி நாசமாக போனால் என்ன?

இந்த காமெடி-க்கு இடையில் , இலங்கை தமிழர் நல உரிமை (?) அமைப்பு, சோனியா காந்தியை சந்தித்து மூன்று கோரிக்கைகளை வைத்து உள்ளது.
ஒன்று : பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களுக்கு இணையான அந்தஸ்து அளிக்க பட வேண்டும. அதுக்கு சோனியா இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.
இரண்டு :ஐ.நா. படையை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் ( இவங்க போனது போதவில்லை என நினைக்கிறேன்)
மூன்று : இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் ( ஆயுத தடை பற்றி கவலை இல்லை)

பொறுங்கள் இனிமேல்தான் காமெடி ஆரம்பிக்கிறது. சோனியாவின் பதில் என்ன தெரியுமா? இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலை இடாது. எனவே இது பற்றி பிரணாப் -எடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். எப்படி போகிறது கதை.


http://www.nitharsanam.com/?art=27241
http://www.nitharsanam.com/?art=27232
http://www.nitharsanam.com/?art=27240





"நெஞ்சு பொறுக்குதில்லையே -
இந்தநிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்".
நிஜமாகவே நெஞ்சம் பொறுக்குதில்லை. என்னதான் நடக்குது இலங்கை-யில். அதை விட வேடிக்கை தமிழ் நாட்டில் நடப்பதுதான். தங்கபாலு சூளுரைக்கிறார் " இனியும் பொறுத்து கொள்ள மாட்டோம், சோனியாவின் படங்களை கொளுத்தினால்". எப்படி இருக்கிறது கதை? அது சரி மானம் கெட்ட தமிழ்நாடு காங்கிரஸ்க்கு தமிழன் கொளுத்தப்பட்டால் கவலை இல்லை.. ஆனால் அன்னை சோனியாஜி புகை படம் முக்கியம். அவர்களை பொறுத்த வரை புலி எதிர்ப்பு முக்கியம்.
காங்கிரஸ் -இ பொறுத்தவரை புலிகள் வேறு, ஸ்ரீலங்கா தமிழன் வேறு. புலிகள் தமிழனே இல்லை. ஸ்ரீலங்கா தமிழ் மக்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு.. இதைவிட பெரிய காமெடி இந்த உலகத்தில் இல்லை.. இதை சொல்லும் எவனும் ஒரு தடவை கூட அகதி முகம் பக்கம் தலை வச்சு படுத்து இருக்க மாட்டன். அது திறந்தவெளி சிறை தவிர வேறு ஒன்றும் இல்லை. என்ன ஒரே ஒரு வித்தியாசம். ஸ்ரீலங்கா ஆர்மி விட்டு வச்சு இருந்தா பிள்ளை குட்டி உடன் இருக்கலாம். தப்பி தவறி கூட வெளியில் வந்து விட கூடாது. அப்படி வந்திட்டா நீ விடுதலை புலி. என்ன ஒரு கண்டு புடிப்பு. இந்தியா துணை கண்டதை சுத்தி பாகிஸ்தான், நேபால்,சீனா, பர்மா, பங்களாதேஷ் என ஏகப்பட்ட நாடுகள். enguம aகதி முகாம் இல்லை. அப்படி என்றால் அந்த நாடுகளில் இருந்து எவரும் இந்தியா உள்ளே வருவது இல்லையா?. விபசாரத்துக்கு பங்களாதேஷ், நேபால் -ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் எல்லை தாண்டும் மக்களின் அளவுக்கு கணக்கு எதுவும் இல்லை. கண்டு கொள்ள படுவது இல்லை.
எனக்கு ஒன்று மட்டும் விளங்க வில்லை. எங்கே போனார்கள் ஹிந்து மத காப்பாளர்கள்?. புத்த மதத்தை சேர்ந்தவன் என்பதுக்காக சீனா-வும், ஜப்பான் -உம் ஸ்ரீலங்கா அரசை ஆதரிக்கிறது. அப்படி எனில் தமிழன் ஹிந்து இல்லையா? எனில் அவன் தனி ஒரு மதமா?.
இதை எல்லாம் சொன்னால் அவன் இந்தியா இறையாண்மை -க்கு எதிரானவன். இந்தியா அரசுக்கு என்னை பொறுத்தவரை "இறை" தன்மையும் இல்லை, ஆண்மையும் இல்லை.
இது இப்படி இருக்க , தமிழ்நாட்டு கருணாவின் ( ஆம். கருணாநிதி தான்) பேச்சு வேறு என்னை மேலும் கடுப்பு அடைய செய்கிறது. ஸ்ரீலங்கா தமிழருகாக இரண்டு முறை ஆட்சி-யை தியாகம் செய்தாராம். நான் சென்ற மாதம் வரை தி.மு.க. ஆதரவாளன் . அவர் ஒன்றும் தியாகம் செய்ய வில்லை. விடுதலி புலிகளை காரணம் காட்டி அவரிடம் இருந்து ஆட்சி புடுங்கப்பட்டது என்பதே உண்மை.
ஜெயலலிதா பற்றி நாம் சொல்லவே தேவை இல்லை. அந்த அம்மணிக்கு சசிகலா நல்ல இருந்தாலே போதும். எவன் செத்தால் அவளுக்கு என்ன?

அய்யா ராமதாஸ் தைலாபுரத்தில் உக்கார்ந்து கொண்டு தனி கதை சொல்லுகிறார். அன்புமணி ராமதாஸ் என்ன பண்ணுகிறார்? மத்திய அரசு நடவடிக்கை புடிக்கவில்லை எனில் பதவி விலக வேண்டியதுதானே?

காணாமல் போனவர்கள் பட்டியல் அதிகம். எனக்கு தெரிஞ்சு எதையும் எதிர் பார்க்காமல் போராட்டம் செய்து கொண்டு இருப்பவர் இரண்டு பேர் மட்டுமே. ஒன்று நெடுமாறன் , மற்றொருவர் சீமான்.

சீமான் நிலை என்ன ஆக கூடும்? தமிழ்நாட்டு காவல் துறை அவர் மீது மேலும் மேலும் வழக்குகள் போட்டு அலைகழிக்க கூடும். வேலூர்-ல் ஒரு வழக்கு. பாண்டி-ல ஒரு வழக்கு என திசைக்கு ஒரு நாள் என "வாய்தா" போட கூடும்.

வேற என்ன சொல்ல.. இந்தியன்-ன்னு சொல்லவே வெக்கமா இருக்கு. என்னோட கையாலாகாத தனத்தை நினைத்து வெக்க பட மட்டுமே முடியுது..

 

W3C Validations

Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus. Morbi dapibus dolor sit amet metus suscipit iaculis. Quisque at nulla eu elit adipiscing tempor.

Usage Policies