WEB BLOG
this site the web

தாய் தமிழகம்?

திரைப்பட நடிகர் சத்யராஜ் தமிழக மக்களின் பங்களிப்பு ஈழ தமிழ் பிரச்சினையில் வேதனை அளிக்க கூடியதாக இருக்கிறது என்றும், பக்கத்து வீடு பற்றி எரியும் வேலையில் நாம் இப்படி சும்மா இருப்பது கூடாது என்றும் கொந்தளிக்கிறார். அட போங்கயா... இவர் என்ன புரியாத ஆளாக இருக்கிறார் ?. தமிழன் என்ன மானமுள்ள ரோசமுள்ள சீக்கியனா?. உணர்வுகள் துரு புடித்து ஆண்டுகள் பல ஆகி விட்டது. தற்போதைய தமிழனின் தலையாய கடமைகள்,

அரசு கொடுத்த இலவச தொலை காட்சி பெட்டிகளில் மானாட மார்பாட , மன்னிக்கவும் மானாட மயிலாட போன்ற கருத்தாழம் மிக்க நடன நிகழ்ச்சிகளிலும் , காலை முதல் மாலை வரை அழுது தொலைக்கும் நெடுந்தொடர்களிலும் ( நிகழ்ச்சிகள் தமிழாக்கம் : தமிழின காவலர் கலைஞர் ) கவனம் செலுத்துவது. இத்தகைய தொலை காட்சி நெடுந்தொடர் ஒன்றில் கூட ஒருவனுக்கு ஒரு மனைவியோ, ஒருத்திக்கு ஒரு கணவனோ இல்லை என்பது கூடுதல் அம்சம்.
காசு வாங்கி கொண்டு கள்ள ஒட்டு முதல் நல்ல ஒட்டு வரை போட்டு முடிந்தவரை ஜனநாயகத்தை காப்பாற்ற முயல்வது.
தலைவன் நடித்த திரை படம் வெளி வந்தால் தோரணம் கட்டி பீர் நீராட்டு, பால் நீராட்டு, கற்புரம் காட்டி வழிபாடு செய்வது போன்ற பல புண்ணிய காரியங்கள் செய்வது மற்றும் அதற்காக தலைமை மன்றத்துக்கு மனு போட்டு பதிவு செய்து கொள்வது. (உதாரணம் : பலான பலான ரசிகர் மன்றம் , பதிவு எண : 45௬௭ / ௯௬). கொஞ்ச நாட்கள் கழித்து தலைவர் அரசியலுக்கு வர வேண்டுமென்று இதே ரசிகர் மன்றத்தில் தீர்மானம் போடுவது, சித்திரை திருவிழாவை முன்னிட்டு காசு வசூல் பண்ணி பக்தர்களை வரவேற்று ரசிகர் மன்றம் சார்பில் போஸ்டர் ஓட்டுவது, அம்மனுக்கு கூழ் ஊற்றுவது இவையெல்லாம் முக்கிய கடமைகள்.

இவ்வளவு பணிகளுக்கு இடையில் ஈழ தமிழர் பற்றி நினைக்க அவனுக்கு நேரம் எப்படி கிடைக்க அவன் என்ன கலைஞரா?

எவன் எக்கேடு கேட்டு போனால் எனக்கு என்ன?. மானமுள்ள தமிழன் ஒன்று தீ குளித்து மாண்டு போகிறான் அல்லது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி சிறைக்கு போகிறான். பாதி தமிழன் தமிழ் நாளேடுகளை பார்ப்பதே இல்லை (தமிழ் நாளேடு படிப்பது இழுக்கு) அல்லது
நாளேடு பார்க்கும் பழக்கமே இல்லை.

வழக்கு அறிஞர்கள் மட்டும் விடாது இந்த பிரச்சினை பற்றி போராட்டம் நடத்தி கொண்டு இருந்தனர். தமிழின காவலர் அய்யா கலைஞர் அவர்களால் அதுவும் திசை மாற்றப்பட்டு விட்டது. எதை வைத்து கொண்டு நாம் இதை தாய் தமிழகம் என்று சொல்லுகிறோம் என்பது மட்டும் புரியவில்லை. வேண்டுமானால் மாற்றான் தாய் தமிழகம் எனலாம்.

நானும் ஒரு அடிமை......

"ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு என்ன உதவி செய்திட முடியும் "என்று சொன்னராம் பெரியார் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு உதவிட கூறி வந்த அமிர்தலிங்கத்திடம். என்னோவொரு சத்யமான உண்மை.? பல ஆயிர கணக்கானமக்கள் வெறும் இருபது முன்று சதுர கிலோ மீற்றுக்குள் சுருங்கி உணவுக்கும், மருத்துவ உதவிகளுக்கும் எதிர் பார்த்து கிடக்கையில், வெறும் கையை பிசைந்து கிடக்கும் எங்களின் நிலையை விளக்க இதைவிட ஒரு விளக்கம் தேவை இல்லை. இதற்கு மேலே சொன்னால் நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியவன் ஆகி விட கூடும்.
நேற்று முன்தினம் இந்தியராணுவத்தில் பணிபுரியும் என்னுடைய நண்பன் ஒருவன் பேசிக்கொண்டு இருக்கையில், அவன் சொன்ன செய்தி என்னை மேலும் கவலைக்கு உள்ளாகியது. இந்திய ராணுவ வீரர்கள் இலங்கையில் சண்டை இடுவது உண்மை என்றும் , அந்த படையில் ஒரு தெனிந்தியா வீரன் கூட இடம் பெறாமல் மிகவும் கவனமாக தேர்வு செய்து உள்ளதும் தெரிய வந்து உள்ளது. புலிகளின் ஒவ்வொரு அசைவும் ஆளில்லா விமானகள் மூலம் கண்காணிக்க படுவதாகவும் தெரிகிறது. பொன்சோக தந்து உள்ள அறிக்கையில் சொல்லி இருக்கிறான் " தமிழ் ஈழ கனவு பலிக்க போவது இல்லை. புலிகள் முற்றோடு அளிக்க படுவார்கள். எங்களிடம் வரும் தமிழக மக்களுக்கு அன்பும், அரவணைப்பும் உண்டு என்று". அந்த அன்பும் அரவணைப்பும் வேறு ஒன்றும் இல்லை பட்டினி சாவுகளும், சித்திரைவதைகளுமே தவிர வேறு ஒன்றும் இல்லை. சிங்கம் சைவம் ஆகி விட்டது என்று சொன்னால் யார் நம்புவர்?
இலங்கைக்கு ராணுவ உதவி செய்யும் இந்தியாவின் நோக்கம் எதுவாக இருக்க கூடும்?
ராஜிவின் கொலைக்கு பழி தீர்த்தல் மற்றும் மால்தீவை போல சிறிலங்காவையும் தனது கட்டுக்குள் இதன் மூலம் கொண்டுவந்து, இந்த பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட. இதை அறிந்துதான் பல சிங்கள அமைப்புகள் இன்னும் இந்தியாவை எதிர்த்து தொடர்ந்து கூச்சல் போடுகின்றது.
இந்தியாவின் ஆசைகளுக்கு தமிழ் இனம் இங்கே பலி கடா ஆக்கப்பட்டு இருப்பதுதான் வேதனை அளிக்க கூடிய விஷயம். அங்கே எவன் செத்தாலும் கவலை இல்லை. நான் ஊகித்தவரையில் மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் சர்க்கரை தடவி தமிழக தலைவர்களுக்கு கீழ் கண்டவாறு சொல்ல பட்டு இருக்கலாம்.
இந்த போரின் பின் முற்றாக புலிகளின் ஆதிக்கம் அளிக்க பட்டு விடும்,
அதன் பின் இலங்கை இந்தியா சொன்ன படி ஆட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ள பட்டுவிடும். பிறகு தமிழர்களுக்கு சுய ஆட்சி அல்லது சம உரிமை வாங்கி தருவதில் எந்த இடயுரும் இருக்க போவது இல்லை.
புலிகள் அந்த பிரதேசத்தில் இருக்கும் வரை இது நடக்க போவதும் இல்லை.
கடந்த சில மாதங்களாக கருணாநிதியும், தமிழக காங்கிரஸ் அமைச்சர்களும் விடும் அறிக்கைகளை கூர்ந்து கவனித்தால் இது விளங்க கூடும்.
எது எப்படி ஆகினும் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் முடிவு தெரிந்து விட கூடும். பொறுத்து இருந்து பார்ப்பதை தவிர எனக்கு வேறு வழி இல்லை.

ஒரு "ஒ" போடுங்க....

தேர்தலின் உச்ச கட்ட நகை சுவை காட்சிகள் அரங்கேற்றம் ஆரம்பம் அகி விட்டது.

ஒன்று : சிறீலங்காவில் போர் நிறுத்தம் கோரி தமிழக முதல்வர் சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங் ஆகியோருக்கு தந்தி அனுப்பி உள்ளார். நிருபர் ஒருவரிடம் நேற்று செருப்படி வாங்கிய சிதம்பரத்தை தொலை பேசியில் நலம் விசாரித்தார். இன்றைய திகதியில் இதைவிட ஒரு காமெடி இருக்க முடியாது. வழக்கமாக கடிதம் எழுதும் அவர் பிரச்சினையின் தீவிரம் அறிந்து தந்தி அனுப்பி இருக்கிறார். என்னே கருணை. அந்த தந்தி அவர்கள் வீட்டு குப்பை தொட்டிக்கு கூட போகாது. தமிழக அரசியல் வியாபர தலைகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தயவு செய்து ஈழ தமிழர்கலைவைத்து அரசியல் காமெடி செய்வதை விட்டு விடுங்கள். உங்கள் மீதான நம்பிக்கைகளை அவர்கள் இழந்து நாட்கள் பல ஆகிவிட்டது.

இரண்டு: முன்னாள்பிரதமர் இந்திரா கொலை செய்ய பட்ட போது சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டியதாக ஜகதிஷ் டைட்லர் மீது குற்றம் சாட்ட பட்டு இருந்தது. ஜகதிஷ் டைட்லர் மீதான முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டது, சீக்கியர்களுக்கு பெரும் கோபத்தை கொடுத்தது. அதே இனத்தை சேர்ந்த மன்மோகன் பிரதமராக இருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு தீர்ப்பு. இதில் மன்மோகன் சிங்கை குற்றம் சொல்லி பலன் இல்லை.
மன்மோகன் சிங் ஒரு பிள்ளை பூச்சி. சோனியா சொன்னபடி ஆடி கொண்டு இருக்கிறார். சுருங்க சொன்னால் அவர் சோனியாவுக்கு கிடைத்த பன்னீர் செல்வம். அவ்வளவே..

இதற்கு இடையில் சிங்கள கட்டு மிராண்டி அரசு, புதுக்குடியிருப்பு பகுதியில் சிக்கி இருக்கும் தமிழர்கள் மீது நச்சு வாயு குண்டுகளை ஏவி கொள்ளல கூடும் என்று தகவல்கள் வெளியாகி இருப்பது மிகவும் வேதனையை அளிக்க கூடியதாக இருக்கிறது. லண்டன்-ல் கடந்த இரண்டு நாட்களாக தமிழர்கள் நடத்தும் போராட்டம் ஏதேனும் பலன் அளிக்குமா என்று தெரியவில்லை. அந்த போராட்டங்களில் தமிழ்நாட்டு தமிழர்களும் கலந்து கொள்கிறார்களா என்ன? எனக்கு என்னவோ இன்னும் அந்த சந்தேகம் இருக்கிறது.சீமான் மற்றும் அய்யா நெடுமாறன் தவிர வேறு எவரும் தொடர் போராட்டத்தில் இறங்கி இருப்பதாக தெரியவில்லை. எங்கே போனார்கள் தமிழ் நாட்டின் அறிவு ஜீவிகள்? சாதி சங்க தலைவர்கள்?.

நான் கவலை கொள்வது எல்லாம், தமிழ் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியதுதான். இனி அந்த குழந்தைகளின் பள்ளி வாழ்கை என்பது ஒரு முடிந்து போன கதை. லங்கன் அரசு ஏற்பாடு செய்ய போகிற புனரமைப்பு பணிகள் ஒரு மயிரையும் புடுங்க போவதில்லை. அவர்கள் படிப்பு அறிவு அற்றவர்களாக, தற்குறி வாழ்கையில் இன்னல் பட போவதை நானும் ஒரு மௌன சாட்சியாக இருந்து பார்த்து கொண்டு இருப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அப்படி ஏதேனும் முயற்சி இருப்பின் என்னையும் நண்பர்கள் இணைத்து கொண்டால், அதைவிட வேறு ஒன்றும் பெரிய மகிழ்ச்சி இருக்க போவதில்லை.

தமிழ் இனம் கூண்டு அழிந்து கொண்டு இருக்கும் இந்த வேளையிலும் பாரளுமன்ற தேர்தலுக்காக நாடகம் ஆடிக்கொண்டு இருக்கும் இந்த கொடுஞ்செயல் அரசியல் வியாபாரிகளை கண்டித்து இந்த தேர்தலில் என்னுடைய வாக்கு எந்த "நாய்" -க்கும் கிடையாது. நாற்பது ஒன்பது "ஒ" -ல் போட போகிறேன்......
 

W3C Validations

Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus. Morbi dapibus dolor sit amet metus suscipit iaculis. Quisque at nulla eu elit adipiscing tempor.

Usage Policies