வீழ்ந்ததாம் தமிழர் படை..
நக்கி குடியுங்கள் நரிகளே
இனிக்கிறதா எங்கள் ரத்தம்?
மிச்சம் இருந்தால் கொஞ்சம்
புத்தருக்கும் கொடுங்கள்.
உடல் சிதறி திசைகொரு பாகமாய்
வானம் பார்த்து கிடைகின்றன
எங்களவரின் சடலங்கள்
வல்லூறுகள் வாசனை கண்டு வருமுன்
வந்து பார்க்க சொல்லுங்கள்
இத்தாலி ராணியை
இதுதானே அவள் கேட்டது?.
முயலும் வேட்டை நாய்களும்
கூடி வாழ வேண்டுமென
கூடி நின்று குரல் கொடுத்தவர்களே
உங்கள் காதுகளில் கேக்கவே
இல்லையா எங்கள் கூக்குரல்?
உங்களின் பலிக்கு
எங்களில் மிச்சம் இருப்பது
உறுப்பு இழந்த ஒரு சில
பச்சிளம் குழந்தைகள் மட்டுமே
நாங்கள் கூடி அழ
கொண்டாட்டம் போடுகிற்வர்களே
கொஞ்சம் பொறுங்கள்
முற்றுபெறவில்லை எங்கள் போராட்டம்
முளை கிள்ளி விடப்பட்டு இருக்கிறது
நீங்கள் புடித்தது புலி வாலை
சிரிக்கும் உங்கள் இதழ்கள்
சீக்கிரம் உச்சரிக்கும்
யுத்தம் சரணம் கச்சாமி!!!
யுத்தம் சரணம் கச்சாமி !!!!
Posted by
Maheswaran Nallasamy
, புதன், 20 மே, 2009 at AM 12:48, in
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)