WEB BLOG
this site the web

Recent Photos

image
image
image

ஒரு "ஒ" போடுங்க....

தேர்தலின் உச்ச கட்ட நகை சுவை காட்சிகள் அரங்கேற்றம் ஆரம்பம் அகி விட்டது.

ஒன்று : சிறீலங்காவில் போர் நிறுத்தம் கோரி தமிழக முதல்வர் சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங் ஆகியோருக்கு தந்தி அனுப்பி உள்ளார். நிருபர் ஒருவரிடம் நேற்று செருப்படி வாங்கிய சிதம்பரத்தை தொலை பேசியில் நலம் விசாரித்தார். இன்றைய திகதியில் இதைவிட ஒரு காமெடி இருக்க முடியாது. வழக்கமாக கடிதம் எழுதும் அவர் பிரச்சினையின் தீவிரம் அறிந்து தந்தி அனுப்பி இருக்கிறார். என்னே கருணை. அந்த தந்தி அவர்கள் வீட்டு குப்பை தொட்டிக்கு கூட போகாது. தமிழக அரசியல் வியாபர தலைகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தயவு செய்து ஈழ தமிழர்கலைவைத்து அரசியல் காமெடி செய்வதை விட்டு விடுங்கள். உங்கள் மீதான நம்பிக்கைகளை அவர்கள் இழந்து நாட்கள் பல ஆகிவிட்டது.

இரண்டு: முன்னாள்பிரதமர் இந்திரா கொலை செய்ய பட்ட போது சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டியதாக ஜகதிஷ் டைட்லர் மீது குற்றம் சாட்ட பட்டு இருந்தது. ஜகதிஷ் டைட்லர் மீதான முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டது, சீக்கியர்களுக்கு பெரும் கோபத்தை கொடுத்தது. அதே இனத்தை சேர்ந்த மன்மோகன் பிரதமராக இருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு தீர்ப்பு. இதில் மன்மோகன் சிங்கை குற்றம் சொல்லி பலன் இல்லை.
மன்மோகன் சிங் ஒரு பிள்ளை பூச்சி. சோனியா சொன்னபடி ஆடி கொண்டு இருக்கிறார். சுருங்க சொன்னால் அவர் சோனியாவுக்கு கிடைத்த பன்னீர் செல்வம். அவ்வளவே..

இதற்கு இடையில் சிங்கள கட்டு மிராண்டி அரசு, புதுக்குடியிருப்பு பகுதியில் சிக்கி இருக்கும் தமிழர்கள் மீது நச்சு வாயு குண்டுகளை ஏவி கொள்ளல கூடும் என்று தகவல்கள் வெளியாகி இருப்பது மிகவும் வேதனையை அளிக்க கூடியதாக இருக்கிறது. லண்டன்-ல் கடந்த இரண்டு நாட்களாக தமிழர்கள் நடத்தும் போராட்டம் ஏதேனும் பலன் அளிக்குமா என்று தெரியவில்லை. அந்த போராட்டங்களில் தமிழ்நாட்டு தமிழர்களும் கலந்து கொள்கிறார்களா என்ன? எனக்கு என்னவோ இன்னும் அந்த சந்தேகம் இருக்கிறது.சீமான் மற்றும் அய்யா நெடுமாறன் தவிர வேறு எவரும் தொடர் போராட்டத்தில் இறங்கி இருப்பதாக தெரியவில்லை. எங்கே போனார்கள் தமிழ் நாட்டின் அறிவு ஜீவிகள்? சாதி சங்க தலைவர்கள்?.

நான் கவலை கொள்வது எல்லாம், தமிழ் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியதுதான். இனி அந்த குழந்தைகளின் பள்ளி வாழ்கை என்பது ஒரு முடிந்து போன கதை. லங்கன் அரசு ஏற்பாடு செய்ய போகிற புனரமைப்பு பணிகள் ஒரு மயிரையும் புடுங்க போவதில்லை. அவர்கள் படிப்பு அறிவு அற்றவர்களாக, தற்குறி வாழ்கையில் இன்னல் பட போவதை நானும் ஒரு மௌன சாட்சியாக இருந்து பார்த்து கொண்டு இருப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அப்படி ஏதேனும் முயற்சி இருப்பின் என்னையும் நண்பர்கள் இணைத்து கொண்டால், அதைவிட வேறு ஒன்றும் பெரிய மகிழ்ச்சி இருக்க போவதில்லை.

தமிழ் இனம் கூண்டு அழிந்து கொண்டு இருக்கும் இந்த வேளையிலும் பாரளுமன்ற தேர்தலுக்காக நாடகம் ஆடிக்கொண்டு இருக்கும் இந்த கொடுஞ்செயல் அரசியல் வியாபாரிகளை கண்டித்து இந்த தேர்தலில் என்னுடைய வாக்கு எந்த "நாய்" -க்கும் கிடையாது. நாற்பது ஒன்பது "ஒ" -ல் போட போகிறேன்......
 

W3C Validations

Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus. Morbi dapibus dolor sit amet metus suscipit iaculis. Quisque at nulla eu elit adipiscing tempor.

Usage Policies