WEB BLOG
this site the web

சாமியார் "மட"ங்கள்!!!!!


நானும் ரொம்ப நாளா முடிவு பண்ணி வச்சு இருந்தேன், நானா போயி எவனையும் திருத்த முயற்சி பண்ண வேணாமின்னு ( ரொம்ப குழம்ப வேணாம்..நாத்திகம் பேசுறதுதான் அது). நம்மள சும்மா இருக்க விடுறாய்க இல்ல. நமக்கு திங்கள், செவ்வாய் தான் வார விடுமுறை.. சரிதான்.. இன்னும் ரெண்டு நாள் நமக்கே நமக்கா-ன்னு பேப்பர் எடுத்தா..

முன்னாடி வருதையா ஸ்ரீரங்கம் ஜீயர் நியூஸ்.. வயசு எண்பத்து ஏழு. சொந்த ஊரு மேற்கு வங்காளம். இருபது ஐந்து வருடம் தமிழ்நாடு வாசம். கோடிகணக்கான சொத்துக்கு (கவனிக்க: இவர் ஒரு சாமியார்) இவர் வச்சதுதான் சட்டம். ஒரிசா -ல இருந்து சாமியாருக்கு சமைச்சு போட வந்த ஆளு பத்ரி. அவனுக்கு சமைச்சு போட அவன் பொண்டாட்டி. பொறுமை மக்களே.. கதை இனி தான் ஆரம்பம்.அந்த அம்மணியோட இந்த சாமியார் காம களியாட்டங்களில் ஈடுபட்டதாகவும், அதை வைத்து கொண்டு அந்த ஒரிசா சமையல்காரன் சாமியாரை மிரட்டி சகல உரிமைகளையும் வாங்கி கொண்டதாகவும் பேச்சு.
இந்த ஆளைதான் காணவில்லை, சமையல் காரனும் அவன் மனைவியும் சாமியாரை மிரட்டி ஊரை விட்டு விரட்டி இந்த சொத்தை எல்லாம் அனுபவிக்க பாக்குறாங்கன்னு ஒருத்தன் போட்டான் கேஸ். நம்ம ஊரு போலீஸ்-ம அந்த சாமியாரை தேடி கொண்டு வந்தாங்க. அவரும் நீதி மன்றத்துக்கு வந்தார். நீதிமான் கேக்குறாரு " அய்யா சாமி தர்ம பிரபு .. எங்க போய் இருந்தீங்க இம்புட்டு நாலுன்னு".. சாமியார் உடனே சொல்லுராரு "தமிழ் மாலும் நகி...ஹிந்தி தெரிஞ்ச ஆளு வேணுமின்னு". கடுப்பு ஆன நீதிபதி " அய்யா நக்கல் பண்ணாதீங்க..எங்களுக்கும் சூது வாது தெரியும். இம்புட்டு நாலு இங்கதானே இருந்தீங்க.. தமிழ் தெரியலைன்னு சொன்ன எப்படி?"-ன்னு கேட்டார். சாமியாரும் சளைச்ச பாடு இல்ல. அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?.. " ஆமா... நீங்க சொல்லுறது சரிதான் ஆனா நான்தான் மடத்தை விட்டு வெளிய போனது இல்ல..இப்போதான் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி சமையல்கார பத்திரி-ஐ மடத்தை பார்த்துக்க சொல்லிட்டு மடத்துக்கு வருமானம் கொண்டு வர வடக்கே போன்னேனு". எண்பத்து ஏழு வயசு ஆ"சாமி" விவகாரமே இப்படின்னா.. தமிழ் நாட்டுல இருக்கிற நிறைய "கன்னி ஆ"சாமி" " விவகாரம் எப்படி இருக்குமோ?.
எங்கயோ இருந்து இங்க வந்து நம்ம ஊரு சொத்துல வர வருமானத்தில தின்னு போட்டு தமிழ் தெரியாதின்னு பொய் சொல்லுறேனே..தமிழன் கேனபயல்-ன்னு சொல்ல இத விட வேற வேணுமா..?

3 comments:

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

vasu balaji சொன்னது…

நல்லாத்தான் போடுறாய்ங்கப்பா நாமம். கோடி சேர்த்த கேடியாழ்வார் போல இருக்கு.

Unknown சொன்னது…

நல்லா .... நச்சுனு ஒரு பதிவு....!! அருமையா இருந்துது தோழரே.....!!!

கருத்துரையிடுக

 

W3C Validations

Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus. Morbi dapibus dolor sit amet metus suscipit iaculis. Quisque at nulla eu elit adipiscing tempor.

Usage Policies